நூற்றி ஐம்பத்தெட்டு உயிர்கள். தாங்கமுடியாத அதிர்ச்சியை மங்களூர் விமான விபத்து ஏற்படுத்தியுள்ளது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால் அதைக் காட்டிலும் கூடுதல் அதிர்ச்சியைத் தரக்கூடிய செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஆகிய துறைகளில் நிலவிக்கொண்டிருக்கும் குளறுபடிகள், குழப்பங்கள், கோளாறுகள், ஓட்டைகள் தொடர்பானவை.
இந்தியாவில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் துறைகளுள் சிவில் விமானப் போக்குவரத்து முக்கியமானது. வர்த்தக விஷயங்கள் தொடர்பாக விரைந்து சென்று காரியங்களை முடிக்க வேண்டும் என்று விரும்பும் அத்தனை பேரும் இன்று சலலமில்லாமல் தேர்வு செய்வது விமானப் பயணத்தைத்தான். பயணச் செலவைப் பற்றிக் கவலைப்பட இன்று யாரும் தயாராக இல்லை. விமானப் பயணத்தால் கிடைக்கக்கூடிய லாபம் அபரிமிதமாக இருக்குபோது பயணத் தொகை பற்றிக் கவலைப்படுவது புத்திசாலித்தனமல்ல. நேரத்துக்கு நேரம். லாபத்துக்கு லாபம்.
விளைவு, கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இந்தியாவில் விமானத்தில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. 2005ஆம் ஆண்டில் மூன்று கோடியே எழுபது லட்சம் பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார்கள். தற்போது அந்த எண்ணிக்கை விஸ்வரூபம் எடுத்து ஏழு கோடியைத் தொட்டுவிட்டது. அதேபோல, விமானம் தரையிறங்குதல் மற்றும் மேலெழும்புதலின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது எண்பது சதவீதம் உயர்ந்திருக்கிறது.
நியாயமாகப் பெருமைப்படக்கூடிய வளர்ச்சிதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக்கொள்ளத் தவறிவிட்டது இந்திய சிவில் விமானப் போக்குவரத்துறை. விமானிகள், ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர்கள், பராமரிப்புப் பொறியாளர்கள், ரெகுலேட்டர்கள் என்று விமானத்தின் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரிடமும் பிரச்னைகள் இருக்கின்றன. விமானிகளிடம் இருந்து தொடங்கலாம். தொடர்ந்து படிக்க இங்கே செல்லவும்
Thursday, June 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment